Monday 6th of May 2024 08:31:50 AM GMT

LANGUAGE - TAMIL
-
அமைச்சர் சமல் ராஜபக்சவுடன்  தமிழ் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள்  சந்திப்பு!

அமைச்சர் சமல் ராஜபக்சவுடன் தமிழ் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு!


தமிழ் தேசிய கட்சிகளின் பாராளுமன்றஉறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் அமைச்சர் சமல் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன் போது பல்வேறு விடயங்களுக்குஅமைச்சர் சாதகமான பதில்களைவழங்கியுள்ளதுடன் அடுத்த கட்டமாக மீண்டும் ஒரு சந்திப்பை நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

கல்முனை பிரதேச செயலகத்தை தரமிறக்கும் நடவடிக்கையை நிறுத்திவைக்கவும் இணக்கம் தெரிவித்தார்.

அத்துடன் முல்லை கரைத்துறைப்பற்றில் 08 கிராம சேவையாளர் பிரிவுகளதும் காணிநிர்வாகத்தினை மகாவலி அதிகார சபைபொறுப்பேற்பதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறும் அமைச்சர் சமல்ராஜபக்ச பணித்துள்ளார்.

இது தொடர்பில் குழு அமைத்து ஆராயும்வரை எந்த நடவடிக்கையும் மேலதிகமாக நடைபெறாதெனவும் அவர் கூறியுள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE